என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடுதலை சிறுத்தை விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை நடக்கிறது
Byமாலை மலர்8 Aug 2019 6:31 AM GMT (Updated: 8 Aug 2019 6:31 AM GMT)
சென்னை தேனாம்பேட்டையில் விடுதலை சிறுத்தை விருதுகள் வழங்கும் விழா திருமாவளவன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (8-ந் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
விருதுகள் வழங்கும் விழா கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடக்கிறது. மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்கிறார். மாநிலபொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
இந்துராமிற்கு அம்பேத்கர் சுடர் விருதும், வி.ஐ.பி.கோ. விஸ்வநாதனுக்கு பெரியார் ஒளி விருதும், அயோத்தி தாசன் விருது மா.நாகப்பனுக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு காமராஜர் விருதும் வழங்கப்படுகிறது.
காயிதே மில்லத் பிறை விருது செ.திவானுக்கும், செம்மொழி ஞாயிறு விருது நல்லி நா.குப்புசாமிக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார். விருதுகளுடன் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்கிறார்கள். விழாவினை கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (8-ந் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
விருதுகள் வழங்கும் விழா கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடக்கிறது. மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்கிறார். மாநிலபொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
இந்துராமிற்கு அம்பேத்கர் சுடர் விருதும், வி.ஐ.பி.கோ. விஸ்வநாதனுக்கு பெரியார் ஒளி விருதும், அயோத்தி தாசன் விருது மா.நாகப்பனுக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு காமராஜர் விருதும் வழங்கப்படுகிறது.
காயிதே மில்லத் பிறை விருது செ.திவானுக்கும், செம்மொழி ஞாயிறு விருது நல்லி நா.குப்புசாமிக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார். விருதுகளுடன் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்கிறார்கள். விழாவினை கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X