என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹெல்மெட் அணியாமல் சென்ற 70 பேரை கோர்ட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்ற போலீசார்
Byமாலை மலர்7 Aug 2019 11:07 AM GMT (Updated: 7 Aug 2019 11:07 AM GMT)
தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வகனத்தில் சென்ற 70 பேரை அங்குள்ள 11 கோர்ட்டுகளுக்கு போலீசார் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி நகரில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜன் உத்தரவின் பேரில் நடந்த இந்த சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் இருந்த 70 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் அபராதம் வசூலிக்காமல் போலீஸ் வாகனத்திலேயே ஏற்றி தர்மபுரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள 11 கோர்ட்டுகளையும் அவர்களுக்கு சுற்றி காட்டினார்கள்.
இதனால் ஹெல்மெட் அணியாமல் சென்ற 70 பேரும் இன்று வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. நாளை முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்வதாக அவர்கள் போலீசாரிடம் உறுதி அளித்தனர். போலீசாரின் இந்த நூதன சுற்றுலா ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X