search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட்
    X
    ஹெல்மெட்

    ஹெல்மெட் அணியாமல் சென்ற 70 பேரை கோர்ட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்ற போலீசார்

    தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வகனத்தில் சென்ற 70 பேரை அங்குள்ள 11 கோர்ட்டுகளுக்கு போலீசார் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி நகரில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜன் உத்தரவின் பேரில் நடந்த இந்த சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் இருந்த 70 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் அபராதம் வசூலிக்காமல் போலீஸ் வாகனத்திலேயே ஏற்றி தர்மபுரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள 11 கோர்ட்டுகளையும் அவர்களுக்கு சுற்றி காட்டினார்கள்.

    இதனால் ஹெல்மெட் அணியாமல் சென்ற 70 பேரும் இன்று வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. நாளை முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்வதாக அவர்கள் போலீசாரிடம் உறுதி அளித்தனர். போலீசாரின் இந்த நூதன சுற்றுலா ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    Next Story
    ×