search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    பெரம்பூர் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து- பொருட்கள் நாசம்

    பெரம்பூர் இன்று காலை மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    பெரம்பூர்:

    பெரம்பூர் திம்மசாமி தர்கா தெருவில், பெரியார் நகரை சேர்ந்த ரியாஸ் என்பவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை, 8 மணியளவில் 2 தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்த மெத்தைகள் தீ பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    செம்பியம் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். என்றாலும், மெத்தைகள் மற்றும் அதை தயாரிக்கும் பொருட்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. 

    தீவிபத்துக்கான காரணம் குறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×