search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட உண்டியல்.
    X
    மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட உண்டியல்.

    முத்துப்பேட்டை அருகே அம்மன் கோவிலில் நகை-உண்டியல் பணம் திருட்டு

    முத்துப்பேட்டை அருகே அம்மன் கோவிலில் பீரோவில் இருந்த நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கற்பகநாதர்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கற்பக மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துக்கொண்டு பூசாரி பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கதவுகள் திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த சாமிக்கு அலங்கரிக்கும் செயின், மாங்கல்யம் தாலி உட்பட 20 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ எடைகொண்ட வெள்ளி பொருட்கள், மற்றும் கோவில் மூல பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும், உண்டியலையும் உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர். 

    இதனையடுத்து கோவில் நிர்வாகி நேதாஜி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் விசாரணை மேற்கொண்டார். டி.எஸ்.பி. இனிகோ திவ்யன் கோவிலை பார்வையிட்டு விசாரணை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×