search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    போச்சம்பள்ளி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

    போச்சம்பள்ளி அருகே சுற்றுலா செல்வதற்கு தந்தை பணம் கொடுக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சீதா (வயது22). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரியில் சுற்றுலா செல்வதற்காக தந்தை ராஜாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை. அடுத்த முறை சுற்றுலா செல்லும்போது கண்டிப்பாக பணம் கொடுப்பதாக கூறினார். இதனால் சீதா மனமுடைந்து காணப்பட்டார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் சீதா குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது மகளை காணவில்லை என்று ராஜா அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தார். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சீதா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து வந்து சீதாவின் உடலை கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×