search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருப்பூர் அருகே பேக்கரி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி

    திருப்பூர் அருகே திருமணத்துக்கு ஜாதகம் பார்க்க சென்ற பேக்கரி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் பொங்கலூர் அடுத்த தொங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 25). பேக்கரி கடை ஊழியர். நேற்று காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாவிபாளையத்தில் தனது திருமணம் குறித்து ஜாதகம் பார்த்தார். அதே ஊரில் இருந்த நண்பர் சுந்தரமூர்த்தியின் வீட்டில் தங்கினார். நேற்று காலை யோகேஸ்வரன் அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் யோகேஸ்வரன் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக போலீசார் கூறினர்.

    Next Story
    ×