என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரோவில் முந்திரி காட்டில் சதிதிட்டம் தீட்டி கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடி கைது
சேதராப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் உதயராஜ் (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது மேட்டுப்பாளையத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கு, விழுப்புரத்தில் நடந்த ஜெனா கொலை வழக்கு மற்றும் 3 வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இதற்கிடையே உதயராஜ் தனது கூட்டாளிகளுடன் குற்றசெயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் உதயராஜை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.
இந்த நிலையில் உதயராஜ் பொம்மையார் பாளையம்- ஆரோவில் முந்திரி காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ஆரோவில் போலீசார் முந்திரி காட்டில் பதுங்கி இருந்த உதயராஜை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்