search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auroville"

    • கிராம மக்கள் திடீரென கூடி கூட்டம் நடத்தியதால் பரபரப்பு
    • விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு ஆரோவில் நிர்வாகத்திடம் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதியான சர்வதேக நகரமான ஆரோவில்லில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாசிகள் வசித்து வருகின்றனர்.

     ஆரோவில் நகரத்தை சுற்றி இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதிகள் உள்ளது.

    இப்பகுதியில் வசிக்கும் மக்கள், ஆரோவில் சுற்றியும் மையப்பகுதியிலும் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். 1968-ம் ஆண்டு ஆரோவில் நிறுவனம் துவங்கப்ப ட்டபோது, இரும்பை ஊராட்சியில் 70 சதவீதம் நிலங்களையும், பொம்மை யார்பாளையம் ஊராட்சியில் 30 சதவீதம் நிலங்களையும், விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு ஆரோவில் நிர்வாகத்திடம் அளித்தனர்.

    இந்நிலையில் ஆரோவில் மையப்பகுதியை சுற்றி எஞ்சியுள்ள விவசாய நிலங்கள், அரசு நிலங்களையும், விரிவாக்கப்பணிக்காக விவசாயிகளிடம் வாங்கு வதற்கான முயற்சிகளை ஆரோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    மாத்திர் மந்திர் சுற்றியும், அதற்கு வெளியில் உள்ள நிலங்களையும், அரசு நிலங்களையும் கையெகப்படுத்தும் முயற்சிக்கு இரும்பை மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சியில் உள்ள பொது மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள வண்டிப்பாதை, நீரோடப்பா தை, மேய்ச்சல் நிலங்களை அப்பகுதி மக்கள் பயன்படுத்தாத வகையில் தடை ஏற்படுத்தி வருவதாக ஆரோவில் நிர்வாகம் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இரும்பை மற்றும் பொம்மையார்பாளையம் ஊராட்சி மக்கள் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பங்கேற்ற அனைவரும் இரும்பை ஊராட்சி யின் வண்டிப்பாதை, மேய்ச்சல் நிலம், நீரோடை பாதையை ஆரோவில் நிர்வாகத்திற்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், ஆரோவில் பகுதியில் உள்ள அனைத்து வண்டிப்பாதைகளையும் பூர்வீக மக்கள் பயன்படுத்த தடையாக உள்ள சோதனை சாவடிகளை உடனடியாக அகற்றுவது, ஆரோவில் நிர்வாகம் நிலத்தை வாங்கினாலும், வெளி நிலத்திற்கு ஈடாக தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை கலெக்டர், பி.டி.ஓ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    • புதுவையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று விட்டு ஆரோவில் சர்வதேச நகரத்தை உலக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி பார்க்க வருவதால் பாதுகாப்பு வளையத்திற்குள் ஆரோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • மேலும் 30-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆரோவில் எல்லைக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே வர போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்று விட்டு ஆரோவில் சர்வதேச நகரத்தை உலக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி பார்க்க வருவதால் பாதுகாப்பு வளையத்திற்குள் ஆரோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

    31-ந் தேதி ஆரோவிலை சுற்றி பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுவையில் வருகின்ற 30 மற்றும் 31-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு மரப்பாலம் அருகே உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    31-ந் தேதி மாநாட்டில் பங்கேற்று விட்டு மதியம் ஆரோவில் சர்வதேச நகரத்தை சுற்றி பார்க்க சிறப்பு விருந்தினர்கள் வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக இன்று மண்டல துணை தாசில்தார் அருள்மொழி தலைமையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கோரிமேடு பிள்ளையிலிருந்து ஆரோவில் வரை சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    மேலும் 30-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆரோவில் எல்லைக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே வர போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் ஆரோவில் மாத்திர் மந்திரில் பொதுமக்களுக்கு தியானமும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.
    • வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.

    புதுச்சேரி:

    ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.

    ஒரு பகுதியில் சுற்றுச் சுவர் கட்டி அதில் விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. இயந்திர மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் வாங்கிய இடத்திற்கு முறைப்படியான ஆவணங்கள் வைத்துள்ளார். மேலும் இந்த ஆதாரங்களை சுப்பிரமணியன் ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகத்திடமும் வருவாய் துறையிடமும் அந்த ஆவணங்களை வழங்கி உள்ளார்.

    இன்று அவர் மீண்டும் பணியாளர்களை வைத்து இடத்தை சுத்தம் செய்ய முற்பட்ட போது மரங்களை வெட்டக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டயமாக வெளியேற்றினர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்த இடம் பிரச்சினை தொடர்பாக வெளிநாட்டவர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடை யஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.
    • ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

    புதுச்சேரி:

    ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடை யஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.

    ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி அதில் விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியான மற்றொரு இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தினர்‌.

    மேலும் அந்த இடம் ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் அந்த இடத்தில் வெளிநாட்டினர் பணி செய்ய விடாமல் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

    இதுகுறித்து ஆரோவில் போலீசில் சுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். அந்த இடத்தில் ஆரோ வில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×