search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மோசடி
    X
    பண மோசடி

    முதல் திருமணத்தை மறைத்து வாலிபரை 2-ம் திருமணம் செய்து ரூ. 5 லட்சம் மோசடி செய்த பெண்

    முதல் திருமணத்தை மறைத்து வாலிபரை 2-ம் திருமணம் செய்த பெண் மீதான புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே உள்ள அயன்குருவித்துறையை சேர்ந்தவர் காமாட்சி (55). இவரது மகன் ரமேஷ். பரவையை சேர்ந்த லதா (43) என்ற பெண்ணை ரமேஷ் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

    திருமணம் ஆன சில நாட்களில் லதாவின் நட வடிக்கைகளில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. லதாவுக்கு ஏற்கனவே மணிமாறன் என்பவருடன் திருமணம் நடந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்த கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    ரமேசிடம் இருந்து ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் 9½ பவுன் நகைகளையும் அபகரித்துக்கொண்டு லதா சென்றுவிட்டார். இதுகுறித்து கேட்க சென்ற ரமேஷ் மற்றும் அவரது தாயார் காமாட்சி ஆகியோரை லதா மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து காமாட்சி காடுபட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி புகாரை விசாரித்து லதா மற்றும் நந்தினி, கோபி, கவிதா, ரஞ்சித் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×