என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
Byமாலை மலர்19 July 2019 7:42 AM GMT (Updated: 19 July 2019 7:42 AM GMT)
தஞ்சை,வேலூரை பிரித்து மேலும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கருங்கல்:
குமரி மேற்கு மாவட்டம் கருங்கலில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழக அரசின் திட்டங்களுக்கு பொது மக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நீர் வளத்தை காக்க துணை நிற்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு எனவும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
இதுபோல தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டமும், வேலூரை பிரித்து புதிய மாவட்டமும் உருவாக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூர் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை கழக த.மா.கா. நிர்வாகிகள் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான குமாரதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தார். அவரது இறுதி சடங்கில் ஜி.கே.வாசனால் கலந்து கொள்ள இயலவில்லை.
எனவே அவர் இன்று கருங்கலில் உள்ள குமாரதாஸ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த குமாரதாஸ் உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமரி மேற்கு மாவட்டம் கருங்கலில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழக அரசின் திட்டங்களுக்கு பொது மக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நீர் வளத்தை காக்க துணை நிற்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு எனவும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
இதுபோல தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டமும், வேலூரை பிரித்து புதிய மாவட்டமும் உருவாக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளித்தது. எனவே இப்போது நடக்கும் வேலூர் தேர்தலில் அங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கே த.மா.கா. ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான குமாரதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தார். அவரது இறுதி சடங்கில் ஜி.கே.வாசனால் கலந்து கொள்ள இயலவில்லை.
எனவே அவர் இன்று கருங்கலில் உள்ள குமாரதாஸ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த குமாரதாஸ் உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X