search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் பேசிய காட்சி.
    X
    உதயநிதி ஸ்டாலின் பேசிய காட்சி.

    உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி முதல் கூட்டம்

    தலைவராக பதவி ஏற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி முதல் கூட்டம் தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப் பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற முதல் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது.

    உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத் தில் பங்கேற்றனர்.

    கூட்டத்துக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று நடந்தது வெறும் கலந்துரையாடல்தான். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பல கருத்துக்களை தெரிவித்தனர். நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. அனைத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்.

    எனது சுற்றுப்பயணத்துக்கான தேதி முடிவாகவில்லை. தேதி முடிவான பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கி இளைஞரணியை பலப்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×