என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி முதல் கூட்டம்
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப் பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற முதல் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது.
உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத் தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று நடந்தது வெறும் கலந்துரையாடல்தான். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பல கருத்துக்களை தெரிவித்தனர். நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. அனைத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்.
எனது சுற்றுப்பயணத்துக்கான தேதி முடிவாகவில்லை. தேதி முடிவான பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கி இளைஞரணியை பலப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்