என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்26 Jun 2019 2:24 PM GMT (Updated: 26 Jun 2019 2:24 PM GMT)
புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் உருளையன் பேட்டை போலீசார் கடலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக 2 பேர் வந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் விக்கிரவாண்டிய சேர்ந்த ராஜ்குமார் (வயது 21), பானி பூரி கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் என்பது தெரியவந்தது. உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 6 மோட்டார் சைக்கிளும், பெரிய கடை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 3 மோட்டார் சைக்கிள் திருடியதை ஒத்துக் கொண்டனர்.
அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டு அவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X