என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வந்தவாசி அருகே கார்-பைக் மோதி தந்தை, மகன் பலி
வந்தவாசி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (32) கூலி தொழிலாளி இவரது மனைவி சுவிதா (28) தம்பதியினருக்கு தினேஷ்(2) என்ற மகன் இருந்தார்.
சுவிதாவின் தாய்வீடு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாரில் உள்ளது. தெள்ளாரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கங்காதரன் மனைவி குழந்தையுடன் பைக்கில் வட சிறுவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திண்டிவனம் நெடுஞ்சாலை கொடியாலம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது. அங்கு திண்டிவனத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற கார்-பைக் மீது மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே கங்காதரன் பரிதாபமாக இறந்தார். சுவிதா, தினேஷ் இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தினேசையும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுவிதாவையும் அனுப்பி வைத்தனர். அங்குசிகிச்சை பலனின்றி இரவு தினேஷ் இறந்தார். சுவிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்