என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ வீரர் 2-வது திருமணம் - போலீஸ் நிலையத்தில் தாலியை கழட்டிக்கொடுத்த புதுப்பெண்
Byமாலை மலர்24 Jun 2019 11:43 AM GMT (Updated: 24 Jun 2019 11:43 AM GMT)
சுவாமிமலையில் ராணுவ வீரர் முதல் திருமணத்தை மறைத்த 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த புதுப்பெண் தாலியை கழட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள மதனத்தூர் அக்ர ஹாரத்தில் வசிப்பவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 42). இவர் அலகாபாத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவை சேந்த ஸ்டெல்லா ராணி (41) என்பவரை முறைப்படி திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மகன் விஷால் (21) சென்னையில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மகள் சூர்யா (17) மகாராஷ்டிராவில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார் .
இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ்க்கும் அவரது மனைவி ஸ்டெல்லா ராணிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 6 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனால் மனமுடைந்த சுபாஷ் சந்திர போஸ் முதல் மனைவி ஸ்டெல்லா ராணிக்கு தெரியாமல் மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த சோணமுத்து மகள் நித்தியா( 36) என்பவரை சுவாமிமலை முருகன் திருக்கோவிலில் நேற்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் தெரிந்து கொண்டு அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ராணி சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் சுவாமிமலை கோவிலுக்கு சென்று சுபாஷ் சந்திரபோசிடம் விசாரணை நடத்தினர். இதில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்தது தெரிய வந்ததால் சுபாஷ் சந்திர போஸை கைது செய்தார்.
அப்போது முதல் திருமணத்தை மறைத்து தன்னை சுபாஷ் சந்திர போஸ் 2-வது திருமணம் செய்ததை அறிந்து ஆத்திரம் அடைந்த நித்தியா தாலியை கழட்டி சுபாஷ் சந்திரபோசிடம் கொடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவாமிமலை அருகே உள்ள மதனத்தூர் அக்ர ஹாரத்தில் வசிப்பவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 42). இவர் அலகாபாத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவை சேந்த ஸ்டெல்லா ராணி (41) என்பவரை முறைப்படி திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மகன் விஷால் (21) சென்னையில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மகள் சூர்யா (17) மகாராஷ்டிராவில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார் .
இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ்க்கும் அவரது மனைவி ஸ்டெல்லா ராணிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 6 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனால் மனமுடைந்த சுபாஷ் சந்திர போஸ் முதல் மனைவி ஸ்டெல்லா ராணிக்கு தெரியாமல் மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த சோணமுத்து மகள் நித்தியா( 36) என்பவரை சுவாமிமலை முருகன் திருக்கோவிலில் நேற்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் தெரிந்து கொண்டு அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ராணி சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் சுவாமிமலை கோவிலுக்கு சென்று சுபாஷ் சந்திரபோசிடம் விசாரணை நடத்தினர். இதில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்தது தெரிய வந்ததால் சுபாஷ் சந்திர போஸை கைது செய்தார்.
அப்போது முதல் திருமணத்தை மறைத்து தன்னை சுபாஷ் சந்திர போஸ் 2-வது திருமணம் செய்ததை அறிந்து ஆத்திரம் அடைந்த நித்தியா தாலியை கழட்டி சுபாஷ் சந்திரபோசிடம் கொடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X