என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே 2 பைக்குகள் மோதியதில் தொழிலாளி பலி
Byமாலை மலர்24 Jun 2019 11:35 AM GMT (Updated: 24 Jun 2019 11:35 AM GMT)
நெல்லை அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது27), கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜா (27) என்ற ஓட்டல் தொழிலாளியும் நேற்று மோட்டார் சைக்கிளில் தாழையூத்து ரைஸ்மில் தெருவில் வந்தனர்.
அப்போது எதிரே தாழையூத்தை சேர்ந்த போலீஸ்காரர் கண்ணன் (38) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென்று நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த போலீஸ்காரர் கண்ணன் என்பவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு போராடிய ஆனந்த், ராஜா ஆகிய 2 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ஆனந்த் பரிதாபமாக இறந்தார். ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது27), கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜா (27) என்ற ஓட்டல் தொழிலாளியும் நேற்று மோட்டார் சைக்கிளில் தாழையூத்து ரைஸ்மில் தெருவில் வந்தனர்.
அப்போது எதிரே தாழையூத்தை சேர்ந்த போலீஸ்காரர் கண்ணன் (38) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென்று நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த போலீஸ்காரர் கண்ணன் என்பவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு போராடிய ஆனந்த், ராஜா ஆகிய 2 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ஆனந்த் பரிதாபமாக இறந்தார். ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X