search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    மதுரையில் பெண்ணிடம் நகை பறிப்பு

    நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை விராட்டிபத்து முத்து காலனியைச் சேர்ந்தவர் மாரிபிரகாஷ் (வயது32), கணினி நிறுவன அதிகாரி.

    இவரது மனைவி ஜாக்குலின். இவர் ஆரப்பாளையம் காமராஜர் பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஜாக்குலின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து கரிமேடு போலீசில் ஜாக்குலின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தத்தனேரி களத்துபொட்டல் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த அருண் (27) வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த விஷ்ணு, மதன், தளவாய் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கி பணம் பறிக்க முயன்றதாகவும், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகவும் செல்லூர் போலீசில் அருண் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஷ்ணு உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×