என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி
Byமாலை மலர்15 Jun 2019 11:50 AM GMT (Updated: 15 Jun 2019 11:50 AM GMT)
புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மானேஜரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனி உள்ளது. இந்த ஷூ கம்பெனியில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு ஷூ சப்ளை செய்யப்படும்.
அதுபோல் கடந்த 2016-ம் ஆண்டு இந்த ஷூ கம்பெனியில் இருந்து ஒரு நிறுவனத்துக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 476 மதிப்புள்ள ஷூக்கள் சப்ளை செய்யப்பட்டது.
அதற்கான பணத்தை காசோலையாக அந்த நிறுவனம் ஷூ கம்பெனிக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த பணம் கம்பெனி கணக்கில் செலுத்தப்படவில்லை. ஆண்டு கணக்கு தணிக்கையில் அந்த பணத்தை ஷூ கம்பெனியில் மானேஜராக பணிபுரிந்த சதீஷ் என்பவர் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஷூ கம்பெனியின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசலு கிருஷ்ணன் பெரியகடை போலீசில் புகார் செய்தார். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் சீனிவாசலு கிருஷ்ணன் புதுவை கோர்ட்டில் முறையீடு செய்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பெரியகடை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரூ.7½ லட்சம் பணம் மோசடி செய்த ஷூ கம்பெனி மானேஜர் சதீசை தேடி வருகிறார்கள்.
புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனி உள்ளது. இந்த ஷூ கம்பெனியில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு ஷூ சப்ளை செய்யப்படும்.
அதுபோல் கடந்த 2016-ம் ஆண்டு இந்த ஷூ கம்பெனியில் இருந்து ஒரு நிறுவனத்துக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 476 மதிப்புள்ள ஷூக்கள் சப்ளை செய்யப்பட்டது.
அதற்கான பணத்தை காசோலையாக அந்த நிறுவனம் ஷூ கம்பெனிக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த பணம் கம்பெனி கணக்கில் செலுத்தப்படவில்லை. ஆண்டு கணக்கு தணிக்கையில் அந்த பணத்தை ஷூ கம்பெனியில் மானேஜராக பணிபுரிந்த சதீஷ் என்பவர் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஷூ கம்பெனியின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசலு கிருஷ்ணன் பெரியகடை போலீசில் புகார் செய்தார். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் சீனிவாசலு கிருஷ்ணன் புதுவை கோர்ட்டில் முறையீடு செய்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பெரியகடை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரூ.7½ லட்சம் பணம் மோசடி செய்த ஷூ கம்பெனி மானேஜர் சதீசை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X