என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையத்தில் பணத்தகராறில் 2 பெண்களுக்கு மிரட்டல்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கரடி மார் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி (வயது 35). ராஜபாளையம் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.
அதில், ஊஞ்சல் மண்டபம் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி பாக்கியலட்சுமி(35)யிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வாங்கினேன். இதற்கு வாரந்தோறும் ரூ.15 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தேன்.
இந்த நிலையில் தளவாய்புரம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது, பாக்கியலட்சுமி வழிமறித்து முழு தொகைகையும் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் ஆசிலாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி(42)யிடம் அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, அவரது மனைவி முருகலட்சுமி ஆகியோர் தனித்தனியே ரூ2 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.
இதற்கு 2016-ம் ஆண்டு வரை வட்டி கட்டிய நிலையில், தற்போது பணத்தை கொடுக்க மறுப்பதோடு, கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேஸ்வரி ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்