என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - ஜிகே வாசன் பதில்
Byமாலை மலர்4 Feb 2019 4:06 AM GMT (Updated: 4 Feb 2019 4:06 AM GMT)
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்போது மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, தொண்டர்களின் கருத்தை கேட்டு கூட்டணி அமைக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார். #ParliamentElection #GKVasan
திருவொற்றியூர்:
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பால் பணிவிடை உகப்படிப்பும், மதியம் பணிவிடை உச்சிப்படிப்பும் நடைபெற்றது.
இதையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் என்பது விவசாய பெருங்குடி மக்களுக்கு முறையாக, முழுமையாக கொடுக்கவேண்டிய நிவாரணத்தை கொடுக்கவில்லை. விவசாயிகள் வறட்சியில் வாடி கொண்டிருக்கிற நிலையில் அவர்களின் வங்கிக்கடனை ரத்து செய்து இருக்கக்கூடிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு தொகையை ஒதுக்கி நிவாரணம் வழங்கி இருக்கவேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் அதை செய்யவில்லை. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம். உடனடியாக அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமாக தங்களது கூட்டணியை அறிவிக்கவில்லை.
த.மா.கா.வும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே தேர்தல் நெருங்கும்போது மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, தொண்டர்களின் கருத்தை கேட்டு கூட்டணி அமைக்கப்படும். அதற்குரிய நாட்களில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நிச்சயமாக வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், அருண்குமார், பிஜூசாக்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #ParliamentElection #GKVasan
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பால் பணிவிடை உகப்படிப்பும், மதியம் பணிவிடை உச்சிப்படிப்பும் நடைபெற்றது.
இதையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் என்பது விவசாய பெருங்குடி மக்களுக்கு முறையாக, முழுமையாக கொடுக்கவேண்டிய நிவாரணத்தை கொடுக்கவில்லை. விவசாயிகள் வறட்சியில் வாடி கொண்டிருக்கிற நிலையில் அவர்களின் வங்கிக்கடனை ரத்து செய்து இருக்கக்கூடிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு தொகையை ஒதுக்கி நிவாரணம் வழங்கி இருக்கவேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் அதை செய்யவில்லை. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம். உடனடியாக அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமாக தங்களது கூட்டணியை அறிவிக்கவில்லை.
த.மா.கா.வும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே தேர்தல் நெருங்கும்போது மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, தொண்டர்களின் கருத்தை கேட்டு கூட்டணி அமைக்கப்படும். அதற்குரிய நாட்களில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நிச்சயமாக வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், அருண்குமார், பிஜூசாக்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #ParliamentElection #GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X