என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இரும்பாலை அருகே எருதாட்ட மாடு முட்டி தொழிலாளி பலி
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கேட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அந்த கோவிலில் நேற்று எருதாட்ட விழா நடந்தது.
இந்த எருதாட்ட விழாவில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கம் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. இதே போல மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.
எருதாட்ட விழா முடிந்ததும் எருதாட்டத்தில் பங்கேற்ற மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த மாடுகளை இரும்பாலையை அடுத்த பவர் கிரிப்ட் பகுதியில் அழைத்து வந்தனர்.
அப்போது சேலம் மாவட்டம் இடங்கணாசாலை பகுதியை சேர்ந்த தொழிலாளியான சுப்புராஜ் (43) என்பவர் சாலையோரம் அமர்ந்திருந்தார். சுப்பு ராஜ் குடிபோதையில் இருந்ததாகவும் அந்த மாடுகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதில் மிரண்டு ஓடிய ஒரு மாடு மீண்டும் திரும்பி வந்து சுப்புராஜின் கழுத்தில் வேகமாக குத்தி தூக்கி வீசியது. இதில் கழுத்து உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்