என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடநாடு விவகாரம் எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம்- தம்பிதுரை
Byமாலை மலர்17 Jan 2019 6:46 AM GMT (Updated: 17 Jan 2019 7:29 AM GMT)
கொடநாடு விவகாரம் என்பது எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #KodanadIssue #ThambiDurai
கோவை:
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த பின் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கொடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் ஒரு புனையப்பட்ட நாடகம்.
தீர்ப்பு வருகிற நாளில் திசை திருப்பும் வகையில் அரசியல் சதிக்காக தவறான செய்தி மூலம் பிளாக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை.
பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது.
தமிழக முதலமைச்சர் மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே தி.மு.க.வின் கொள்கை.
அவரிடம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தம்பிதுரை பதில் அளிக்கும் போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென தி.மு.க. முயல்கிறது என்றார்.
மத்திய அரசுடன், மாநில அரசு என்ற முறையில் நல்ல உறவு உள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலியாக உள்ளது.
அ.தி.மு.க.வை நாங்கள் மேலும் வளர்க்க பாடுபடுகிறோம். பா.ஜ.க.வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.க.வை காலூன்ற வைக்க அ.தி.மு.க.வினர் சுமந்து செல்ல மாட்டோம்.
ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜனதாவா, ஆர்.எஸ்.எஸ்.சா, பத்திரிகையாளரா என எனக்கு தெரியாது. விளம்பரத்திற்காக அவர் பேசுகிறார்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க. செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த பின் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கொடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் ஒரு புனையப்பட்ட நாடகம்.
தீர்ப்பு வருகிற நாளில் திசை திருப்பும் வகையில் அரசியல் சதிக்காக தவறான செய்தி மூலம் பிளாக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. அந்த வெற்றியை சீர்குலைக்க நினைக்கும் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் முயற்சி எடுபடாது.
பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது.
தமிழக முதலமைச்சர் மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே தி.மு.க.வின் கொள்கை.
அவரிடம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தம்பிதுரை பதில் அளிக்கும் போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென தி.மு.க. முயல்கிறது என்றார்.
மத்திய அரசுடன், மாநில அரசு என்ற முறையில் நல்ல உறவு உள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலியாக உள்ளது.
அ.தி.மு.க.வை நாங்கள் மேலும் வளர்க்க பாடுபடுகிறோம். பா.ஜ.க.வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.க.வை காலூன்ற வைக்க அ.தி.மு.க.வினர் சுமந்து செல்ல மாட்டோம்.
ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜனதாவா, ஆர்.எஸ்.எஸ்.சா, பத்திரிகையாளரா என எனக்கு தெரியாது. விளம்பரத்திற்காக அவர் பேசுகிறார்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க. செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X