search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபிஸ்தலம் அருகே ரேசன் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது
    X

    கபிஸ்தலம் அருகே ரேசன் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது

    கபிஸ்தலம் அருகே ரேசன் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே புள்ளப்பூதங்குடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் விற்பனையாளராக பணியாற்றுபவர் சின்னப்பா (வயது 55) . இவர் நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு வழங்கி வந்துள்ளார்.

    அப்பொழுது பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மீண்டும் நாளை வழங்குவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மபுரம் வடக்கு தெரு மோகன் (56) என்பவர் சின்னப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கு இருந்த மெஷின் மற்றும் மேஜை ஆகியவற்றை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து சின்னப்பா கபிஸ்தலம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    Next Story
    ×