search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதீஷ்
    X
    சதீஷ்

    வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

    சிவகாசியில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர், சக்தி கணேஷ் (வயது 48). இவர் சிவகாசியில் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி அருணாதேவி. இவர் களுடைய மகள் அருள் கார்த்தீசுவரி (20), மகன் சதீஷ் (17).

    அருள்கார்த்தீசுவரி சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷ் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவர் சதீஷ் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். வகுப்பறையில் இருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது, சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    மாணவர் மயங்கி விழுந்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×