என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5700 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்- தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைது
Byமாலை மலர்5 Dec 2018 11:08 AM GMT (Updated: 5 Dec 2018 11:08 AM GMT)
மதுரையில் 5700 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரையில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை, குட்கா விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் நகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி தெற்குவாசல், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளையார் பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற ரவிசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 2500 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 62), அவரது மகன்கள் செந்தில்குமார் (37), பழனிராஜன் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3000 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவனியாபுரம் போலீசார் என்.எஸ்.கே. நகரில் ரோந்து சென்றபோது புகையிலை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா (55) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 195 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
மதுரையில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை, குட்கா விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் நகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி தெற்குவாசல், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளையார் பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற ரவிசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 2500 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 62), அவரது மகன்கள் செந்தில்குமார் (37), பழனிராஜன் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3000 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவனியாபுரம் போலீசார் என்.எஸ்.கே. நகரில் ரோந்து சென்றபோது புகையிலை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா (55) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 195 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X