search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tobacco packet"

    • புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மேட்டமலையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தனது பெட்டிக் கடையில் புகையிலை பதுக்கி விற்றதாக கைது செய்யப் பட்டார். இதே போல் நல்லான் செட்டி பட்டியை சேர்ந்த ஜெய கிருஷ்ணன் புகையிலை விற்றதாக கைதானார். இவர்களிடம் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விருதுநகர் அருகே மல்லாங்கிணறு வலுக்கலொட்டி பகுதியை சேர்ந்தவர் உமையொரு பாகம். இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பாக்கெட்டு களை விற்றதாக மல்லாங்கிணறு போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 3 ஆயிரம் மதிப் புள்ள புகையிலை பாக்கெட் டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

    இதேபோல் சேத்தூர் போலீசார் சம்பவத்தன்று ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் உள்ள தேவி பட்டினம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் புகையிலை பாக்கெட் டுகள் கடத்தியது தெரிய வந்தது. காரில் வந்த தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த கார்த்திக், ராஜபாளையம் முகவூரை சேர்ந்த ஜான்வின்சென்ட் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரையில் 5700 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரையில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை, குட்கா விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் நகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தெற்குவாசல், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளையார் பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற ரவிசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 2500 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 62), அவரது மகன்கள் செந்தில்குமார் (37), பழனிராஜன் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3000 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவனியாபுரம் போலீசார் என்.எஸ்.கே. நகரில் ரோந்து சென்றபோது புகையிலை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா (55) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 195 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×