search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் பன்றிகாய்ச்சலுக்கு வாலிபர் பலி
    X

    திருச்சியில் பன்றிகாய்ச்சலுக்கு வாலிபர் பலி

    திருச்சியில் பன்றிகாய்ச்சலால் அவதிப்பட்டு வந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #swineflu
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி கீழஅன்பில் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 நாட்களாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். சரவணன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

    திருச்சி மாவட்டத்தில் டெங்கு , பன்றிகாய்ச்சல் பரவி வந்த நிலையில், சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பரவாமல் தடுத்தனர். 

    இந்தநிலையில் மீண்டும் காய்ச்சல் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #swineflu
    Next Story
    ×