search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் கிராம மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் சப்ளை
    X

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் கிராம மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் சப்ளை

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் கிராம மக்களுக்கு லாரி மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் தாண்டிக்குடி, காமனூர், கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், பூலத்தூர் போன்ற ஊராட்சி பகுதிகள் கஜா புயலால் கடும் சேதம் அடைந்து உள்ளது.

    கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி) பட்டுராஜன் தலைமையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீரை சேகரித்து வைத்து வினியோகம் செய்தனர்.

    தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்தால் குடிநீர் வழங்க முடியவில்லை. இதனால் கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் போன்ற ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் தலைமையில் லாரி மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர்கள் செந்தில்குமார், ரெங்கராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×