search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்காநல்லூர் அருகே இளம்பெண் மாயம்
    X

    சிங்காநல்லூர் அருகே இளம்பெண் மாயம்

    சிங்காநல்லூர் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் பழனிசாமி வீதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகள் கோமதி (வயது 18). இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக தனக்கு வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள டெய்லர் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×