search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singanallur"

    • வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

    கடந்த 8-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பிய செல்வராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டார்.

    பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    • லட்சக்கணக்கில் பணம் தப்பியது
    • வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவை :

    கோவை சிங்காநல்லூர்-திருச்சி ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று இரவு இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பணம் எடுக்க முடியாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். மறுநாள் பணம் எடுப்பதற்காக சென்ற வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏ.டி.எம் மையத்துக்கு வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பணம் கொள்ளை போகவில்லை என்பதும், ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்கமுடியாமல் மர்ம நபர்கள் விட்டு சென்றதால், லட்சக்கணக்கில் பணம் தப்பியதும் தெரியவந்தது.

    இது குறித்து வங்கி அதிகாரி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார்.
    • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவர் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பஸ் ராமநாதபுரம் சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்ததும் செல்வம் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்து இருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள்.

    இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது
    • இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் பஸ் நிைலயம் பின்புறம் விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.தற்போது அந்த கோவிலில் நடந்து வந்த பணிகள் அனைத்தும் முடிந்து, .கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போரா ட்டத்திலும் ஈடுபட்டனர்.மேலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்திலும், டாஸ்மாக் அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அந்த கடையை மூடினர் . ஆயினும் நேற்று மீண்டும் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. சம்பவம் அறிந்த மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய முத்து நேரில் சென்று பார் ஊழியர்களை எச்சரித்து, அனைவரையும் வெளியேற செய்து பாரை பூட்டிவிட்டு சென்றார்.

    அதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    • சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
    • திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை-நாகர்கோவில், மற்றும் பாலக்காடு- திருச்சி பயணிகள் ெரயில்கள் நின்று சென்றன.

    கொரோனாவுக்கு பிறகு இந்த ெரயில்கள் எக்ஸ்பிரஸ் ெரயில்களாக மாற்றப்பட்டன. தொடர்ந்து இங்கு ெரயில்கள் நின்று செல்வதில்லை.

    இதனை தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை ெரயில் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவர்கள் சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    போராட்டத்தின் போது, நா.கார்த்திக் கூறியதாவது:-சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ெரயில்கள் நின்று செல்வதில்லை. இதன் காரணமாக இங்கிருந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    இங்கு ரெயில்கள் நிறுத்த செல்ல வலியுறுத்தி சேலம் கோட்ட ெரயில்வே மேலாளர் தெற்கு ெரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் கோவையில் இருந்து செல்லும் ெரயில்கள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து கோவை வரும் ெரயில்கள் சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மனோகரன், சிங்கை பிரபாகரன், பகுதி செயலாளர் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு‌.பழனிச்சாமி, கொங்குநாடு மக்கள் கட்சி தனபால், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளி ட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் பங்காரு லே-அவுட்டை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த 1-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சீரடி சாய்பாபா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.

    இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம், செயின், மோதிரம், வளையல் உள்பட 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து பிரபு சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிங்காநல்லூரில் 10-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம் பாளையம் தாமோதரசாமி நாயுடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 46). இவரது மனைவி சித்ரா(37). இவர்களுக்கு பாலாஜி(14) என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

    பாலாஜி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி தனது வீட்டு மாடியில் பரீட்சைக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை துணி காயபோடுவதற்காக மாடிக்கு வந்தார். அவருக்கு உதவியாக பாலாஜி துணியை எடுத்து அங்குள்ள கம்பியில் காய போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் தெரியாமல் கை வைத்து விட்டார். இதில் எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்ககாக மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிங்காநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் இருகூர் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஆன்லைன் லாட்டரிகள் விற்றதாக அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் (60) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து லாட்டரி நம்பர்கள் எழுதப்பட்டிருந்த 3 அட்டைகள் மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் போஸ் ராவத்தூர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக சிங்காநல்லூரை சார்ந்த பால சுப்பிரமணியன் (57) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 45 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.950-ஐ பறிமுதல் செய்தார்.

    சிங்காநல்லூர் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் பழனிசாமி வீதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகள் கோமதி (வயது 18). இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக தனக்கு வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள டெய்லர் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    சிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    சிங்காநல்லூர் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மிதப்பதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தவர் இருகூர் சின்னியம்பாளையம் ரோட்டில் உள்ள மாணிக்கம் நகரில் வசித்து வந்த சந்திரசேகர் (வயது 70) என்பதும், மனைவி இறந்து துக்கத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    சிங்காநல்லூர் ஆண்டாள் லே-அவுட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சிவசுப்பிரமணியம் தினமும் குடித்து விட்டு வருவார்.

    இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த சிவசுப்பிரமணியம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அவரது மனைவி அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×