search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly arrest"

    வியாசர்பாடியில் நகை கடையில் கொள்ளையடிக்க முயன்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி சாலையில் நகை நடத்தி வருபவர் மாங்கிலால்.

    இவரது நகை கடைக்கு இன்று பகலில் முதியவர் உள்பட 3 பேர் நகை வாங்க வந்தனர். கடை ஊழியர்களிடம் நகைகளை எடுத்து காட்டும் கூறினர். அவர்கள் காட்டினார்கள்.

    அப்போது ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் அமைந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் உஷார் அடைந்த நகை கடை ஊழியர்கள் 3 பேரையும் பிடித்தனர்.

    இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடந்த வாரம் நடந்த நகை கொள்ளையில் இந்த 3 பேரும் ஈடுபட்டது வீடியோ மூலம் தெரிய வந்தது.

    இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருந்தனர். இதற்கிடையில் 3 பேரில் 2 பேர் நகை கடை ஊழியர்களை தாக்கி விட்டு தப்பி ஓடினர். முதியவர் மட்டும் சிக்கினார். அவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்.

    இந்த கும்பல் கொளத்தூர் மற்றும் வியாசர்பாடி பகுதியில் உள்ள நகை கடைகளில் நகை வாங்குவது போல கைவரிசை காட்டி கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

    சிங்காநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் இருகூர் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஆன்லைன் லாட்டரிகள் விற்றதாக அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் (60) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து லாட்டரி நம்பர்கள் எழுதப்பட்டிருந்த 3 அட்டைகள் மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் போஸ் ராவத்தூர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக சிங்காநல்லூரை சார்ந்த பால சுப்பிரமணியன் (57) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 45 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.950-ஐ பறிமுதல் செய்தார்.

    பேரூர் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பேரூர் அய்யப்பன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த செட்டி வீதியை சேர்ந்த ரவி என்கிற யமகா ரவி (வயது 55) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ. 23 ஆயிரம் பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
    பண்ருட்டி அருகே விவசாயியை கத்தியால் குத்திய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வீரசிங்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45), விவசாயி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (65) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சக்கரவர்த்தி, அவரது மகன் பாலமுருகன் மற்றும் உறவினர்கள் ராஜசேகர், காசிலிங்கம் ஆகிய 4 பேரும் நேற்று வேல்முருகன் வீட்டுக்கு சென்றனர்.

    வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேல்முருகனை குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார். புகாரின் பேரில் சக்கரவர்த்தி, பால முருகன், ராஜசேகர், காசிலிங்கம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    ×