என் மலர்
நீங்கள் தேடியது "farmer knife attack"
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு அஜித் (வயது 22), லோகேஷ் (20), மேகநாதன் (19) ஆகிய மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 3 பேரும் சின்னச்சேரி கிராமத்துக்கு செல்லும் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை ஆபாசமாக பேசி வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சின்னச்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிச்சாண்டி (49) அவர்களை தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் கையில் இருந்த கத்தியால் பிச்சாண்டியை பல்வேறு இடங்களில் வெட்டினர். இதில் மயங்கி விழுந்த பிச்சாண்டியை அந்த வழியாக சென்றவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கோவிந்த சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது பாலத்தின் மீது அமர்ந்திருந்த அஜித் என்னை பிடித்தால் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
போலீசார் தீவிர முயற்சி செய்தும் பாலத்தில் இருந்து அஜித் இறங்கவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று இரவு அஜித் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய லோகேசை தேடி வருகின்றனர்.