search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pallikonda"

    பள்ளிகொண்டா அருகே விவசாயியை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு அஜித் (வயது 22), லோகேஷ் (20), மேகநாதன் (19) ஆகிய மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் மாலை 3 பேரும் சின்னச்சேரி கிராமத்துக்கு செல்லும் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை ஆபாசமாக பேசி வந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சின்னச்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிச்சாண்டி (49) அவர்களை தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் கையில் இருந்த கத்தியால் பிச்சாண்டியை பல்வேறு இடங்களில் வெட்டினர். இதில் மயங்கி விழுந்த பிச்சாண்டியை அந்த வழியாக சென்றவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கோவிந்த சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது பாலத்தின் மீது அமர்ந்திருந்த அஜித் என்னை பிடித்தால் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

    போலீசார் தீவிர முயற்சி செய்தும் பாலத்தில் இருந்து அஜித் இறங்கவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று இரவு அஜித் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய லோகேசை தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மற்றும் பள்ளிகொண்டாவில் வருமான வரியினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #ITRaid

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன். திருவண்ணாமலை டவுன் அணைகட்டி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரிதுறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நாகப்பன் வீடு, அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத ரூ.59 லட்சத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்தனர். பணத்தை கைபற்றி நாகப்பனிடம் விசாரணை நடத்தினர். இரவு 10 மணிக்கு சோதனை நிறைவடைந்தது.


    ரூ.59 லட்சம் எப்படி வந்தது. தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் குடியாத்தம் ரோட்டில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது.

    இங்கு நேற்று மாலை 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். வணிக வளாகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு 1.30 மணிக்கு சோதனை முடிந்தது.

    இதில் கணக்கில் வராத ரூ.44 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் யாருடையது, எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். #ITRaid

    பள்ளிகொண்டா அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் தெருவில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பள்ளிகொண்டா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வாலிபர் ஒருவர் கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்தார். ஏ.டி.எம். மையம் அருகே போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனையடுத்து போலீசார், வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் நந்தா என்கிற முத்துக்குமார் (வயது 22) என்பதும், செங்கல்சூளை வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.

    ×