search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Railway Junction"

    • சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
    • திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை-நாகர்கோவில், மற்றும் பாலக்காடு- திருச்சி பயணிகள் ெரயில்கள் நின்று சென்றன.

    கொரோனாவுக்கு பிறகு இந்த ெரயில்கள் எக்ஸ்பிரஸ் ெரயில்களாக மாற்றப்பட்டன. தொடர்ந்து இங்கு ெரயில்கள் நின்று செல்வதில்லை.

    இதனை தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை ெரயில் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவர்கள் சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    போராட்டத்தின் போது, நா.கார்த்திக் கூறியதாவது:-சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ெரயில்கள் நின்று செல்வதில்லை. இதன் காரணமாக இங்கிருந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    இங்கு ரெயில்கள் நிறுத்த செல்ல வலியுறுத்தி சேலம் கோட்ட ெரயில்வே மேலாளர் தெற்கு ெரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் கோவையில் இருந்து செல்லும் ெரயில்கள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து கோவை வரும் ெரயில்கள் சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மனோகரன், சிங்கை பிரபாகரன், பகுதி செயலாளர் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு‌.பழனிச்சாமி, கொங்குநாடு மக்கள் கட்சி தனபால், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளி ட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையம் தனியாக இயங்கி வந்தது. இதில் 8 கவுண்ட்டர்களில் டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது. பின்னர் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என 3 கவுண்ட்டர்களை மூடினர். தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போனில் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் ஓரிரு கவுண்ட்டர்களை மூடினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 2 கவுண்ட்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையம் முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு மட்டும் ஒரு கவுண்ட்டர் தனியாக இயங்கி வருகிறது. இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் ஒரு தாளில் எழுதி ஒட்டி வைத்துள்ளனர்

    முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டதால் முன்பதிவு மையத்தில் உள்ள கவுண்ட்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு டிக்கெட் பெறுபவர்களும், முன்பதிவில்லா டிக்கெட் பெறுபவர்களும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டி உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதோடு ரெயிலை தவறவிடுகிற நிலை ஏற்படுகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

    திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும். காலை நேரத்தில் பல்லவன், திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க கூட்டம் எப்போதும் அலைமோதும்.

    இதேபோல குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை, திண்டுக்கல், ஈரோடு பயணிகள் ரெயில் உள்ளிட்ட ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணிகள் அதிகஅளவில் பயணிப்பது உண்டு. தற்போது முன்பதிவில்லா டிக்கெட் மையம் முழுவதுமாக மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் சிரமமாக உள்ளது. டிக்கெட் வாங்க வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே தற்போது முன்பதிவு மையத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு தனியாக 4 கவுண்ட்டர்களை ஒதுக்க வேண்டும்.

    முன்பதிவு டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு தனி கவுண்ட்டர்கள் ஒதுக்க வேண்டும். அப்போது தான் முன்பதிவில்லா டிக்கெட்டை எளிதில் பெற்று பயணிக்க முடியும். தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை ஒப்பிடும் போது நேரடியாக கவுண்ட்டரில் டிக்கெட் பெறுவதே மேல் என நினைக்க தோன்றுகிறது.

    தொழில்நுட்ப வளர்ச்சியில் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறிப்பிட்ட அளவே பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெருமளவு பயணிகள் கவுண்ட்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே முன்பதிவில்லா டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற தனி கவுண்ட்டர்களை ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை தொடர்ந்து மற்ற ரெயில் நிலையங்களிலும் முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டு முன்பதிவு மையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் பரவிவருகிறது. முதற்கட்டமாக பெரிய சந்திப்பு ரெயில்நிலையமான திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாரிகள் சோதனை முயற்சியை தொடங்கி உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். 
    ×