search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே தாயை தாக்கிய மகன் கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே தாயை தாக்கிய மகன் கைது

    ஆண்டிப்பட்டி அருகே செய்முறை செய்யாத தாயை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு வைகைநகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி(வயது58). இவரது மகன் ராம்குமார்(32). திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமார் தனது வீட்டில் விசே‌ஷம் வைத்திருந்தார். அதற்கு ஜெயக்கொடி செல்லவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் எதற்காக தனக்கு செய்முறை செய்யவில்லை எனக்கூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

    இதேபோல் கண்டமனூர் வடக்குதெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அவரது மனைவி பாக்கியலட்சுமி(35) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை தாக்கி கொலை செய்ய முயன்றார்.

    இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×