என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியார் பற்றி கருத்து- எச்.ராஜா மீது பொன்னேரி போலீசில் புகார்
Byமாலை மலர்2 Nov 2018 9:06 AM GMT (Updated: 2 Nov 2018 9:06 AM GMT)
பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரவள்ளூரை சேர்ந்தவர் ராஜா. வக்கீல். இவர் வக்கீல்களுடன் பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு சென்று பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளில் சென்னை கிண்டியில் அவருக்கு மரியாதை செலுத்திய பின்னர் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா அளித்த பேட்டியின்போது, தந்தை பெரியார் தேச துரோகி என்று கூறியுள்ளார்.
தீண்டாமை, பெண் விடுதலை, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய பெரியாரை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக வழக்கறிஞர் ராஜா தெரிவித்தார்.
பொன்னேரியை அடுத்த பெரவள்ளூரை சேர்ந்தவர் ராஜா. வக்கீல். இவர் வக்கீல்களுடன் பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு சென்று பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளில் சென்னை கிண்டியில் அவருக்கு மரியாதை செலுத்திய பின்னர் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா அளித்த பேட்டியின்போது, தந்தை பெரியார் தேச துரோகி என்று கூறியுள்ளார்.
தீண்டாமை, பெண் விடுதலை, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய பெரியாரை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக வழக்கறிஞர் ராஜா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X