என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பென்னாகரம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
Byமாலை மலர்31 Oct 2018 2:03 PM GMT (Updated: 31 Oct 2018 2:03 PM GMT)
பென்னாகரம் அருகே பஸ்சில் இருந்து இறங்க முயன்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பென்னாகரம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து பென்னாகரத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். அந்த பஸ் பெரும்பாலை வந்தபோது அங்கு சின்னம்பள்ளியைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் ஏறினார். அவர் பெரும்பாலையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சின்னம்பள்ளிக்கு செல்வதற்காக அந்த பஸ்சில் ஏறினார்.
பஸ் சின்னம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்றபோது தங்கம்மாள் இறங்காமல் இருந்தார். சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டபோது பஸ் நிறுத்தத்தில் இறங்காத அவர் திடீரென்று எழுந்து வந்து சின்னம்பள்ளி பஸ் நிறுத்தம் தாண்டி விட்டது பஸ்சை நிறுத்துங்கள் என்றார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினர். அப்போது தங்கம்மாள் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்றபோது அவர் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X