search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வராக ஆக வேண்டும் என்று விஜய் நினைப்பது உயர்ந்த சிந்தனை- திருநாவுக்கரசர்
    X

    முதல்வராக ஆக வேண்டும் என்று விஜய் நினைப்பது உயர்ந்த சிந்தனை- திருநாவுக்கரசர்

    நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #Vijay
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பாராட்டியவர்கள் இப்போது மகாத்மா காந்தியின் புகழ் பாடுகிறார்கள். இது மனமாறுதல் என்றால் வரவேற்கக்கூடியது. ஓட்டு வாங்குவதற்காக இருக்கக்கூடாது.

    நடிகர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கிவிட்டு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆவதை விட முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை தான் எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வரட்டும்.

    ஆனால் மக்கள் அவர்களை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைப்பது முக்கியம். மக்களே எஜமானர்கள்.



    காங்கிரசில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. எல்லா கருத்துக்களையும் எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

    பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி திகழ்கிறார். நம் தேசத்தின் அர்ப்பணிப்பில் இருக்கும் ராகுல் காந்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வருவார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். இதே போன்ற திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது.

    தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி மற்றும் மதவாத மத்திய அரசை கண்டித்து மக்களிடம் விளக்க பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பாக 234 தொகுதியிலும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Vijay
    Next Story
    ×