என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வராக ஆக வேண்டும் என்று விஜய் நினைப்பது உயர்ந்த சிந்தனை- திருநாவுக்கரசர்
Byமாலை மலர்4 Oct 2018 7:26 AM GMT (Updated: 4 Oct 2018 7:26 AM GMT)
நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #Vijay
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பாராட்டியவர்கள் இப்போது மகாத்மா காந்தியின் புகழ் பாடுகிறார்கள். இது மனமாறுதல் என்றால் வரவேற்கக்கூடியது. ஓட்டு வாங்குவதற்காக இருக்கக்கூடாது.
நடிகர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கிவிட்டு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆவதை விட முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை தான் எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வரட்டும்.
காங்கிரசில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. எல்லா கருத்துக்களையும் எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி திகழ்கிறார். நம் தேசத்தின் அர்ப்பணிப்பில் இருக்கும் ராகுல் காந்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வருவார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். இதே போன்ற திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது.
தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி மற்றும் மதவாத மத்திய அரசை கண்டித்து மக்களிடம் விளக்க பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பாக 234 தொகுதியிலும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Vijay
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பாராட்டியவர்கள் இப்போது மகாத்மா காந்தியின் புகழ் பாடுகிறார்கள். இது மனமாறுதல் என்றால் வரவேற்கக்கூடியது. ஓட்டு வாங்குவதற்காக இருக்கக்கூடாது.
நடிகர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கிவிட்டு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆவதை விட முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை தான் எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வரட்டும்.
ஆனால் மக்கள் அவர்களை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைப்பது முக்கியம். மக்களே எஜமானர்கள்.
காங்கிரசில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. எல்லா கருத்துக்களையும் எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி திகழ்கிறார். நம் தேசத்தின் அர்ப்பணிப்பில் இருக்கும் ராகுல் காந்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வருவார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். இதே போன்ற திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது.
தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி மற்றும் மதவாத மத்திய அரசை கண்டித்து மக்களிடம் விளக்க பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பாக 234 தொகுதியிலும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Vijay
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X