search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன் நடத்தும் தேசபாதுகாப்பு மாநாட்டுக்கு ராகுல்காந்தியை அழைப்பதா? - தமிழிசை கேள்வி
    X

    திருமாவளவன் நடத்தும் தேசபாதுகாப்பு மாநாட்டுக்கு ராகுல்காந்தியை அழைப்பதா? - தமிழிசை கேள்வி

    தேசபாதுகாப்பு மாநாட்டுக்கு ராகுல்காந்தியை அழைப்பதன்மூலம் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகம் மறந்துவிட்டதா? என திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். #TamilisaiSoundararajan
    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை கைது செய்யவில்லை என்று இப்போது ஆவேசப்படும் கட்சிகள், எச்.ராஜாவை கண்டித்தது போல், கருணாசை கண்டிக்காதது ஏன்?

    எச்.ராஜா வழக்கில் அவரை 4-ந்தேதி கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வழக்கை சந்திப்பார்.

    சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையென்று திரும்பத்திரும்ப கூறி வரும் கட்சிகளைப் பார்த்து கேட்கிறேன். பெரும்பான்மை மக்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை.

    இந்து மதத்தவர்களை கொலை செய்ய போவதாக பட்டியலுடன் 5 பேர் கைது செய்யப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மோடி ஆட்சிக்கு வந்தால் மத கலவரம் வரும் என்று கனவு கண்டார்கள். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. அந்த ஆத்திரத்தில் எதை எதையோ பேசுகிறார்கள்.


    தேச பாதுகாப்பு மாநாட்டுக்கு திருமாவளவன், ராகுலை அழைக்கப் போகிறாராம். தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகம் மறந்துவிட்டதா. அவரை அழைப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Thirumavalavan #RahulGandhi
    Next Story
    ×