search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே லாரி மோதி வாலிபர் பலி
    X

    கோவை அருகே லாரி மோதி வாலிபர் பலி

    கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 25). இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மாலை இவர் கடையில் வேலை பார்க்கும் சூலூரை சேர்ந்த ராஜேஷ்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தென்னம்பாளையம் நோக்கி சென்றார்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இளவரசனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராஜேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவலின் பேரில் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பச்சாத்தி(27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×