என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு- தமிழக அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்2 Aug 2018 6:08 AM GMT
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் குற்றவாளிகளை தப்ப வைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். #CBIProbe #Mutharasan #IdolSmugglingCases
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மிக்க கோவில் சிலைகள், சிற்பங்கள் பல ஆண்டுகளாக திருட்டு போய் கொண்டு இருக்கிறது.
வெளிநாடுகளுக்கு சிலைகள் எப்படி செல்கிறது என்றே தெரியவில்லை. கடத்தப்பட்ட சிலைகளை மீட்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.
கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய சூழலில் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தொடர்வதை தமிழக அரசு விரும்பவில்லை.
தற்போது பொன் மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அவர் மீது நம்பிக்கை இல்லை என்று மாநில அரசு கூறுவது மிக வினோதமாக இருக்கிறது.
அவர் தொடர்ந்து பணியை மேற்கொண்டால் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய பலர் சிலை கடத்தல் வழக்குகளில் சிக்கவார்கள் என்ற அச்சுறுத்தல் காரணமாக அவரை விடுவித்து சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து கொள்வதற்கு அரசு வழிவகை செய்கிறது. அரசின் நடவடிக்கை உள்நோக்கமுடையதாக உள்ளது.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல் பொன் மாணிக்கவேலை தொடர்ந்து விசாணை அதிகாரியாக செயல்பட செய்வதன் மூலமாகத்தான் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். கடத்த பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும். ஆகவே அவர் பணியில் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #IdolSmugglingCases #PonManickavel #CBIProbe #Mutharasan
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மிக்க கோவில் சிலைகள், சிற்பங்கள் பல ஆண்டுகளாக திருட்டு போய் கொண்டு இருக்கிறது.
வெளிநாடுகளுக்கு சிலைகள் எப்படி செல்கிறது என்றே தெரியவில்லை. கடத்தப்பட்ட சிலைகளை மீட்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.
கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய சூழலில் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தொடர்வதை தமிழக அரசு விரும்பவில்லை.
தனக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்று பொன் மாணிக்கவேல் கோர்ட்டில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக முடிவு செய்துள்ளது. மாற்ற வேண்டிய பல வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றவில்லை.
அவர் தொடர்ந்து பணியை மேற்கொண்டால் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய பலர் சிலை கடத்தல் வழக்குகளில் சிக்கவார்கள் என்ற அச்சுறுத்தல் காரணமாக அவரை விடுவித்து சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து கொள்வதற்கு அரசு வழிவகை செய்கிறது. அரசின் நடவடிக்கை உள்நோக்கமுடையதாக உள்ளது.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல் பொன் மாணிக்கவேலை தொடர்ந்து விசாணை அதிகாரியாக செயல்பட செய்வதன் மூலமாகத்தான் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். கடத்த பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும். ஆகவே அவர் பணியில் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #IdolSmugglingCases #PonManickavel #CBIProbe #Mutharasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X