search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் - சீமான்
    X

    கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் - சீமான்

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த சீமான், ‘நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும்’ என கூறியுள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #Seeman
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன், பாஜகவின் முரளிதர் ராவ், தமிழிசை, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கருணாநிதி உடல்நலம் குறித்து நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்; முகம் தெரியாத நபரின் பதிவுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, எனினும் வருந்துகிறோம்” என கூறினார்.
    Next Story
    ×