என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் - சீமான்
Byமாலை மலர்29 July 2018 6:32 AM GMT (Updated: 29 July 2018 6:32 AM GMT)
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த சீமான், ‘நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும்’ என கூறியுள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #Seeman
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன், பாஜகவின் முரளிதர் ராவ், தமிழிசை, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கருணாநிதி உடல்நலம் குறித்து நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்; முகம் தெரியாத நபரின் பதிவுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, எனினும் வருந்துகிறோம்” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X