என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
Byமாலை மலர்21 Jun 2018 4:11 PM GMT (Updated: 21 Jun 2018 4:11 PM GMT)
சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
விழுப்புரம்:
சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவில் மாங்காய் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவை காஞ்சீபுரம் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 48) ஓட்டினார். அவருடன் சேம்பலிபுரத்தை சேர்ந்த கண்ணன்(25) வந்தார். மரக்காணம் செட்டிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ஆட்டோ வந்த போது எதிரே ஒரு டேங்கர் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த டிரைவர் சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டேங்கர்லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவில் மாங்காய் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவை காஞ்சீபுரம் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 48) ஓட்டினார். அவருடன் சேம்பலிபுரத்தை சேர்ந்த கண்ணன்(25) வந்தார். மரக்காணம் செட்டிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ஆட்டோ வந்த போது எதிரே ஒரு டேங்கர் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த டிரைவர் சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டேங்கர்லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X