search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது வழக்கு
    X

    போடி அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது வழக்கு

    போடி அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வெள்ளிமலை தெருவை சேர்ந்தவர் சின்னமுத்து (வயது25). இவரிடம் ஆட்டுபண்ணை மற்றும் கோழிபண்ணை வைத்து தருவதாக போடி நந்தவனம் வடக்கு தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தவணையாக வங்கி கணக்கு மூலமும் ரொக்கமாகவும் ரூ.20 லட்சம் வரை வாங்கினர்.

    ஆனால் பண்ணை வைத்து தராமல் இவரை ஏமாற்றி வந்தனர். இதனால் விரக்தி அடைந்த சின்னமுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணம் தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து போடி டவுன் போலீசில் சின்னமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ரஞ்சித்குமார், அவரது மனைவி தீபிகா உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×