என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்9 Jun 2018 12:23 PM GMT (Updated: 9 Jun 2018 12:23 PM GMT)
போடி அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி வெள்ளிமலை தெருவை சேர்ந்தவர் சின்னமுத்து (வயது25). இவரிடம் ஆட்டுபண்ணை மற்றும் கோழிபண்ணை வைத்து தருவதாக போடி நந்தவனம் வடக்கு தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தவணையாக வங்கி கணக்கு மூலமும் ரொக்கமாகவும் ரூ.20 லட்சம் வரை வாங்கினர்.
ஆனால் பண்ணை வைத்து தராமல் இவரை ஏமாற்றி வந்தனர். இதனால் விரக்தி அடைந்த சின்னமுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணம் தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இது குறித்து போடி டவுன் போலீசில் சின்னமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ரஞ்சித்குமார், அவரது மனைவி தீபிகா உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X