search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி டிரைவரை தாக்கி பணம் கேட்டு மிரட்டல்- 2 பேர் கைது
    X

    லாரி டிரைவரை தாக்கி பணம் கேட்டு மிரட்டல்- 2 பேர் கைது

    மீஞ்சூர் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தென்காசியை சேர்ந்தவர் சாமுவேல், லாரி டிரைவர்.இவர் கடந்த 1-ந் தேதி மீஞ்சூரில் இருந்து கும்மிடிபூண்டிக்கு லாரியில் நிலக்கரி ஏற்றி வந்தார். பொன்னேரி நெல் காஸ்ட் கம்பெனி அருகில் வந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவர் சாமுவேல், கிளீனர் இம்மானு வேலை தாக்கி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து டிரைவர் சாமுவேல் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்த அருண், பொன்னேரியை சேர்ந்த ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×