search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
    X

    பெரம்பலூர் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

    சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #PerambalurBusAccident

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை - திருச்சி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பெரம்பலூர் அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. 

    இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஒண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #PerambalurBusAccident
    Next Story
    ×