என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவிலில் எஸ்.ஐ.யுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
Byமாலை மலர்28 May 2018 4:20 PM GMT (Updated: 28 May 2018 4:20 PM GMT)
சங்கரன்கோவிலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐயுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் எ.ஐ.யாக பணியாற்றி வருபவர் சக்திநடராஜன். இவர் நேற்று பஸ்நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அங்குள்ள பாலத்தின் அருகில் செல்லும் போது எதிரே ஒரு வாலிபர் நிலைதடுமாறிய நிலையில் வந்துள்ளார். எஸ்.ஐ. அந்த வாலிபரை நிறுத்தி பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் பகுதி என்பதால் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் எஸ்.ஐ.யுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே எஸ்.ஐ.யை அசிங்கமாக பேசிய வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் விசாரணை நடத்தி பைக்கை ஓட்டி வந்த வீராணத்தை சேர்ந்த முருகராஜ் மகன் ராஜ்குமார் (25) என்பவரை கைது செய்தனர். பொதுமக்கள் முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X