என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
Byமாலை மலர்15 May 2018 10:20 AM GMT (Updated: 15 May 2018 10:20 AM GMT)
மேலூர் அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுக் காணக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஆமூர் ஊராட்சிக்குட்பட்டது மருதூர் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு பெய்த மழை காரணமாக இந்த கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராமமே இருளில் மூழ்கியது.
மின்தடை குறித்து மின் வாரியத்திடம் பொது மக்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மின்தடை காரணமாக அந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. குடிநீருக்காக பெண்கள் 2 கி.மீ. தூரம் அலையும் நிலை ஏற்பட்டது. இது குறித்து புகார் கூறியும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்தும், மின்தடையை சரி செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மேலூர்-ஆமூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஆமூர் ஊராட்சிக்குட்பட்டது மருதூர் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு பெய்த மழை காரணமாக இந்த கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராமமே இருளில் மூழ்கியது.
மின்தடை குறித்து மின் வாரியத்திடம் பொது மக்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மின்தடை காரணமாக அந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. குடிநீருக்காக பெண்கள் 2 கி.மீ. தூரம் அலையும் நிலை ஏற்பட்டது. இது குறித்து புகார் கூறியும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்தும், மின்தடையை சரி செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மேலூர்-ஆமூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X