search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் மணல் குவாரியை எதிர்த்து 17-ந் தேதி தி.மு.க. போராட்டம்
    X

    ஊத்துக்கோட்டையில் மணல் குவாரியை எதிர்த்து 17-ந் தேதி தி.மு.க. போராட்டம்

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி திமுக போராட்டம நடத்த போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூள மேனியில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் கி.வேனு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசன், மூர்த்தி, குணசேகர், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சத்தியவேல், இளைஞர் அணி அமைப்பாளர் லோக் கேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
    Next Story
    ×