search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
    X

    சேலம் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

    குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் வனவாசி கிழக்கு மேற்கு காடு பகுதியை சேர்ந்தவர் வெங்காடச்சலம். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (வயது 24). இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சமீப காலமாக குடும்ப தகராறு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சங்கீதாவுக்கு தற்போது உடல் நிலை சரியில்லாததால் நேற்றிரவும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வெங்கடாச்சலம் வீட்டின் வெளியில் படுத்து தூங்கினார்.

    இன்று காலை எழுந்து பார்த்த போது சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். இதை பார்த்த வெங்கடாச்சலம் அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகள் கதறி அழுதனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 6 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.

    Next Story
    ×