என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே சொத்து தகராறில் உறவினரை தாக்கிய வாலிபர் கைது
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது53). இவரும் பூதிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (39) என்பவரும் உறவினர்கள்.
இவர்களுக்கு இடையே கடந்த 4 வருடங்களாக சொத்து பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று முத்துப்பாண்டி பூதிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த செந்தில்குமார், முத்துப்பாண்டி மீது மோதுவதுபோல் வந்தார். இது குறித்து முத்துப்பாண்டி கேட்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், அவரது நண்பர் முத்துக் குமார் ஆகியோர் முத்துப் பாண்டியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி தெய்வம் (46). தெய்வத்தின் சகோதரர் மஞ்சளாறு அணைப்பகுதியை சேர்ந்த கணேசன் (42). சம்பவதன்று கணேசனிடம் தெய்வம் கொடுத்த பணத்தை கேட்க சென்றார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கணசேன் சகோதரியை கடுமையாக தாக்கினார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல கணேசன் கொடுத்த புகாரின் பேரில் தெய்வம், அவரது மகன் அருண்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்